Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்மிக்க ஆசிரமங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள ஓம் திரு சர்பலிங்கா ஈஸ்வரர் ஆலயம் , ஓம் திரு மெய்ஞான சற்குரு கருமலை சித்தர் தியான பீடம் இங்கு கருமலை சித்தர் சுவாமிகள் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவ ஒடுக்கம் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து நமது ஆசிரமம் கருமலை சித்தர் சுவாமிகளின் ஜீவனேஸ்வர ஐக்கிய திருநாளாம் மங்களகரமான விசுவாச வருடம் மிருகசீரிஷ நட்சத்திரமும் கூடிய சித்திரைத் திங்கள் 18 ம் நாள் 1-5-2025 வியாழக்கிழமை அன்று மிக விமர்சையாக 25 ஆம் ஆண்டு ஓம் சற்குரு மகா குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த குருபூஜை சுமார் நான்கு தலைமுறை பக்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த குருபூஜை விழாவை கொங்கு மண்டல ஸ்ரீ ஸ்ரீ நாராயண குரு ஜீயர் சுவாமிகளின் ஆன்மீக அருளாசிகளும் பக்த கோடிகளுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி யாகம், ஸ்ரீ மகா பஞ்ச பூதயாகம், ஸ்ரீ மகா அதிருத்ர யாகம், ஸ்ரீ மகா சண்டியாகும் மிகவும் சக்தி வாய்ந்த ரிக்,சாம , எஜுர் வேதங்களில் சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்களை கொண்டு நடைபெற்றது .நாம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை தீர்க்கக் கூடிய புண்ணியங்களை சேர்க்கக்கூடிய மகாமகேஸ்வர பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவனடியார்கள் சாதுக்கள் தவ யோகிகள் தவஞானிகள் என்று பலரும் கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார்கள் பாரதம் மட்டுமல்லாது பல தேசங்களில் இருந்து பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு மெய்ஞான சற்குருவின் திருவருளைப் பெற்று அந்தப் பரம்பொருளான பரமேஸ்வரன் பார்வதி தேவியின் இன்னருளைப் பெற்று யாவரும் இன்புற்று வாழ்வோம் அனைத்து பக்தகோடிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Recent News

WhatsApp
Instagram