Mar 02, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Category: உலகம்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘புதுப்பேட்டை’ திரைப்படம்

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26ல்புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.2006 ஆம் ஆண்டுசெல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில்தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.யுவன் சங்கர்ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.புதுப்பேட்டைதிரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட்கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Read more

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31நாட்களுக்கு நிறுத்தம்!

வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி மலை முருகன் கோயிலில் இயங்கும்ரோப்கார் சேவை வரும் 15ம் தேதி முதல் 31 நாட்கள் இடைநிறுத்தம் செய்யப்படும்என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனிடையே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச்செல்ல வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழிகளை பயன்படுத்தலாம் எனவும்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more

சீனாவில் பயங்கர புயல் – 800 விமானங்கள் ரத்து

சீனாவின் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சீனாவில் விமானம் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருப்பிடங்களிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த புயல் காற்றினால் 50 கிலோவுக்கும் குறைவான எடைகொண்டவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சீனா எதிர்கொள்ளும் பெரிய புயல் தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more

“பழிக்குப் பழி..” அமெரிக்கா மீது 34% இறக்குமதி வரியை அறிவித்த சீனா! தொடங்கியது வர்த்தக போர்?

பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது. சீன வர்த்த அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. மேலும், கணினி பாகங்கள், மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய உலோகம் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்காவின் 27 நிறுவனங்களுக்கு வர்த்தகத் தடை அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹை பாயின்ட் ஏரோடெக்னாலஜிஸ், போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான யுனிவர்சல் லாஜிஸ்டிக்ஸ் ஹோல்டிங் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது. “அமெரிக்கா விதித்துள்ள ‘பரஸ்பர வரிகள்’ உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுவதாகவும், உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சேதப்படுத்துவதாகவும், விதிகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கை கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் உள்ளது. இது உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒருதலைப்பட்சமான, கொடுமைப்படுத்தக்கூடிய நடைமுறையாகும். சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது,” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read more

ரத்தக்களறியாக மாறிய உலக வர்த்தகம்! டிரம்ப்பால் பல லட்சம் கோடி அழிந்தது!

உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. ஒரே நாளில் உலக மார்க்கெட் கதற தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே உலக அளவில் பங்குச்சந்தை சரிய தொடங்கி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
Read more

Category

Tags

Trending

Newsletter Signup Form
WhatsApp
Instagram