Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Category: இந்தியா

‘தனது மகனின் உயிரைக் காத்த பிரதமர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்’ – ஆவடியைச் சேர்ந்த தாய் சுகந்தி நெகிழ்ச்சி

எனது மூன்று வயது மகன் மோனிஷ்வரின் உயிரைக் காக்க உரிய நேரத்தில் நிதி உதவி வழங்கி, மறுவாழ்வு அளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆவடியைச் சேர்ந்த சிறுவனின் தாயார் சுகந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி – பெருமாள் தம்பதியினரின் மகன் மோனிஷ்வர் (3). இவர் ‘பீட்டா தலசீமியா மேஜர்’ (Beta Thalassemia Major) எனும் கடுமையான இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்குத் தீர்வாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant) செய்ய வேண்டும் என்றும், அதற்கு சுமார் ₹9.46 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் (HVF) பணிபுரியும் தந்தை பெருமாள் மற்றும் தாய் சுகந்தி ஆகியோரால் இந்த பெரும் தொகையைத் திரட்ட இயலாத சூழல் இருந்தது. பிரதமரின் உடனடித் தலையீடு:குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலையை விளக்கி, நிதியுதவி கோரி கடந்த மார்ச் 27, 2025 அன்று சுகந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தாயின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் அலுவலகம் (PMO), சிறுவனின் சிகிச்சைக்காக ₹8,51,400 நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்தது.தாய் சுகந்தி விடுத்துள்ள நெகிழ்ச்சியான அறிக்கை: ‘எனது மகனின் நிலைமையைக் கண்டு நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தோம். ஐந்து வயதிற்குள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தால்தான் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சாதாரணத் தாயின் குரலுக்கு மதிப்பளித்து, எனது மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய பிரதமர் அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஜூலை 21, 2025 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று எனது மகன் மோனிஷ்வர் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த பிரதமரின் இந்த உதவி, எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது’ என்றார்.இந்த நிகழ்வு, இக்கட்டான மருத்துவச் சூழல்களில் மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும், அக்கறையுடனும் செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. உரிய நேரத்தில் கிடைத்த இந்த நிதியுதவி, ஒரு சிறுவனின் எதிர்காலத்தை மீட்டெடுத்துள்ளது.
Read more

NEET MDS 2025 நுழைவுச் சீட்டு இன்று வெளியாகிறது.. எவ்வாறு பதிவிறக்குவது?

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) NEET MDS நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. NBEMS இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நுழைவுச் சீட்டுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (NEET) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான natboard.edu.in இல் அணுகலாம்.NEET MDS தேர்வு ஏப்ரல் 19 ஆம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வு வடிவத்தில் நடைபெற உள்ளது. முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் NEET MDS நுழைவுச் சீட்டு 2025 ஐப் பதிவிறக்கம் செய்யலாம். NEET MDS 2025 நுழைவுச் சீட்டை எவ்வாறு பதிவிறக்குவது? 1. natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ NBEMS இணையதளத்தைப் பார்வையிடவும். 2. ‘NEET MDS அட்மிட் கார்டு 2025’க்கான இணைப்பைக் கண்டறியவும். 3. உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட இணைப்பைக் கிளிக் செய்யவும், அங்கு நீங்கள் உங்கள் சான்றுகளை உள்ளிட வேண்டும். 4. பின்னர் NEET MDS 2025 நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். 5. எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும். NEET MDS தேர்வுக்கான டெமோ இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கிறது என்பதை வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் நேரடியாக டெமோவை அணுகலாம். NEET MDS தேர்வு முறை: NEET MDS தேர்வு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றுடன் நேரப் பிரிவுகளும் உள்ளன. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி:
Read more

அதிரடி..!! இனி பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது..!! வருகிறது புதிய நடைமுறை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

புதுடில்லி: 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டம் இம்மாத இறுதியில் டில்லியில் அமல் செய்யப்பட உள்ளது.டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணம். பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் ஆகியவற்றுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நம்பர் பிளேட் எண் அடிப்படையில் வாகன விவரங்களை கண்டறியும் தானியங்கி கேமரா நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் அரசின் திட்டம் தள்ளிக்கொண்டே வந்தது. இந் நிலையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆகியோர் திட்டத்தை அமல்படுத்து குறித்து ஆலோசித்து வருகின்றனர்.தற்போது நகரின் 500 எரிபொருள் நிலையங்களில், 477ல் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு விட்டன. 23 மட்டுமே மீதமுள்ளன. அதுவும் அடுத்த 10 நாட்களுக்குள் தயார் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் தடை உத்தரவு இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more

Category

Tags

Trending

WhatsApp
Instagram