Mar 02, 2026

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் இன்று பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கல்வியாண்டில் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.
கல்லூரிச்செயலர் அருட்சகோதரி முனைவர் அருள்சீலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter