Jan 15, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

Author: admin

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில்வளையங்காட்டில் 17ஆம் ஆண்டு அன்னதான விழா

ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும் 17ஆம் ஆண்டு அன்னதான விழா வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் இன்று சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின்திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் KCMB.சீனிவாசன் ஜி கலந்து கொண்டுஅன்னதான விழாவை துவக்கி வைத்தார்.உடன்,GKS.பாலுஜிமாவட்டதுணைத் தலைவர்,R.கோவிந்தசாமி விவசாய அணி மாநில துணைத்தலைவர்,கார்த்திக் OBC அணி மாவட்ட தலைவர்,SM.தம்பி தங்கவேல் விவசாய அணிமாவட்ட பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Read more

திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் விழா

திருப்பூர், காங்கேயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட்டது.அத்திப்பூ கோலமிட்டும்,கேரள பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்தும் மாணவிகள் விழாவினைக் கொண்டாடினர்.
Read more

வெள்ளலூரில் பாண்டிய வேளாளர் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வெள்ளலூரில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 27.07.2025 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சங்க நிர்வாகி R. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இந்த விழா நிகழ்ச்சிக்கு வெள்ளலூர் சங்கத் தலைவர் E.K. கோதண்டசாமி தலைமையேற்பட்டார். மேலும், மதுக்கரை ஊராட்சி அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் மாரியப்பன் சிவகாமி சுந்தரி அவர்களின் மகன் சுந்தரமூர்த்தி,பத்தாம் வகுப்பில் வெள்ளலூர் சமுதாய அளவில் முதலிடம் பெற்ற சக்திவேல் – உமா அவர்களின் மகள் மிருத்யா ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெள்ளலூர் பாண்டிய வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இறுதியாக, தங்கவேல் (லக்ஷ்மி ஸ்டுடியோ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
Read more

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘புதுப்பேட்டை’ திரைப்படம்

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26ல்புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.2006 ஆம் ஆண்டுசெல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில்தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.யுவன் சங்கர்ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.புதுப்பேட்டைதிரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட்கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Read more

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31நாட்களுக்கு நிறுத்தம்!

வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி மலை முருகன் கோயிலில் இயங்கும்ரோப்கார் சேவை வரும் 15ம் தேதி முதல் 31 நாட்கள் இடைநிறுத்தம் செய்யப்படும்என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனிடையே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச்செல்ல வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழிகளை பயன்படுத்தலாம் எனவும்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more

திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கம் சார்பில்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கவளாகத்தில், பள்ளிகுழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புப் பணியின் ஒரு பகுதியாக, நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,திருப்பூர்மாவட்ட தலைமை பாண்டிய வேளாளர் சங்கத்தின் தலைவர் A.மணி அவர்களின்தலைமையில்,பழனிபாண்டியவேளாளர் சங்கத்தின் துணைத் தலைவர் K.C.K.சரவணன்,அறங்காவலர்கள் S.M.சீனிவாசன், K.R.முருகானந்தம், செயற்குழு உறுப்பினர்K.N.முருகானந்தம், திருப்பூர் மாவட்ட பாண்டிய வேளாளர் சங்க அவைத்தலைவர்C.K.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் A.தங்கவேல், C.ஆனந்தன், ராமசாமிஉள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கினர்.சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக பாண்டியவேளாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
Read more

தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கோரிக்கை மனு

பொங்குபாணையம், அய்யம்பாளையம், கிருஷ்ணா நகர்,சக்தி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்.இந்த பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும், இப்பகுதிக்கு அரசு பேருந்து போக்குவரத்தும் இல்லை என்பதால், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கலெக்டரிடம் தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
Read more

கேப்டன் மறைந்தாலும் மறையாத மனித நேயம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவராக   இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவப்புதல்வன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்த படை தலைவன் திரைப்படம் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில்வெளியிடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படம் காண்பதற்கு முன்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறிகுழந்தை வேல் அறிவுறுத்தலின்படி  மாவட்ட தேமுதிகவினர் குஜராத் மாநிலத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள் பின்பு படைத்தலைவன் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.மேலும் இத்திரைப்படம் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்ததாக பெருமையோடு தெரிவித்தனர்.இதில் பகுதி கழகச் செயலாளர்கள் உதயா பிரபு,சண்முகராஜா,ஆனந்தன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார பாண்டி,ரத்தினம்,திருமதி ஷர்மிளா பாரதி மற்றும் தேமுதிக மாநகர் மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர்.
Read more

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் மாணவர்கள் பதக்கப் பலம்!

திருப்பூர் குமரன் குத்துச்சண்டை கழக மாணவர்கள் 2 வெள்ளி,5 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் சங்கமம் கலைக்கல்லூரியில் கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான INVITATIONAL BOXING CHAMPIONSHIP போட்டியில்,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைக் குறிப்பாக Tirupur Kumaran Boxing Club மாணவர்கள் தங்கள் தேர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்தனர்.கீழ்காணும் மாணவர்கள் பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெள்ளிப் பதக்கம்:கி. மோனிஷ் – 50-55 கிலோ எடை பிரிவு,பரத் குமார் – 60-64 கிலோ எடை பிரிவு.வெண்கல பதக்கம்: யாதவ் – 44 கிலோ எடை பிரிவு,கவியரசு – 50-52 கிலோ எடை பிரிவு,முத்தமிழன் – 46-48 கிலோ எடை பிரிவு,நந்தீஸ்வரன் – 47-50 கிலோ எடை பிரிவு,முத்துசாரதி – 70-75 கிலோ எடை பிரிவு.இவ்வாறு மொத்தம் 7 பதக்கங்கள் (2 வெள்ளி,5 வெண்கல) பெற்று,இரண்டுநாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கள் சாதனைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் திரு.கா.ஜெகத்ரட்சகன்,மாணவர்களை பாராட்டி,மேலும் உயர்ந்த சாதனைகளுக்காக உற்சாகம் அளித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more

திருப்பூர் மேற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திட்டமிடல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!” என்ற இலட்சியத்தை முன்னேற்று செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களின் வழிகாட்டலிலும்,பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் அவர்களின் தலைமையிலும்,திருப்பூர் மேற்கு மாவட்டம் பொங்கலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கழகத் தலைவர் பிறந்தநாள் விழா தொடர்பாகவும்,ஊராட்சி மற்றும் சார்பு அணிப் பொறுப்பாளர்களின் இறுதிப்பட்டியல் தயாரித்தல்.மேலும்,ஊராட்சி பகுதிகளில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.முக்கியக் கழக பொறுப்பாளர்கள்:இணைச் செயலாளர் தீன தயாளன்,துணைச் செயலாளர் பிரகாஷ்,பொருளாளர் கோகுல்,தகவல் தொழிநுட்ப அமைப்பாளர் ஷாஜி மேலும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.செயற்குழு உறுப்பினர்கள்: ஈஸ்வரமூர்த்தி,பென்னி,விஜய் ராகவன்.ஊராட்சி செயலாளர்கள்: நாச்சிபாளையம் சுப்பிரமணி,தொங்கட்டிபாளையம் – கார்த்திகேயன்,வ. அவிநாசி பாளையம் – ஆறுமுகம்,கண்டியன் கோவில் – கோபால்,அழகுமலை – மகேஷ் குமார்.தகவல் தொழிநுட்ப பிரிவு:ஜெகன் பிரபு,மனோஜ்.இளைஞரணி:வசந்த்.வெற்றிவேல் தொண்டரணி:பிரபு,ராமசுந்தரம் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு ஆலோசனைகளை முன்வைத்து, கழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.
Read more

TAGS

TRENDING

Newsletter Signup Form
WhatsApp
Instagram